ஜம்முவில் பூஞ்ச் நடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராசிலிருந்து சென்ற பேருந்து அக்னூர் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை இந்த விபத்தின் காரணமாக 21 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்