சென்னையில் விதிகளை மீறி கார், மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மோட்டார் வாகன விபத்து மற்றும் உயிர் இழப்பை குறைக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.குற்றங்களை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நம்பர் பிளேட்டிற்கும் இப்போது கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. மோட்டார் வாகன விதி சட்டத்தின்படி குறிப்பிட்ட அளவில்தான் நம்பர் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கக் கூடாது.
விதிகளை மீறிய வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் நாளை மறுநாள் முதல் அபராதம் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி நம்பர் பிளேட் இல்லையென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.