டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கு அடுத்தடுத்த ஆலோசனை கூட்டம்

December 30, 2023

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆட்சிக்கான தேர்தல் நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு டெல்லியில் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். இதில் வாக்காளர் பட்டியல், ஓட்டு சாவடி, தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் முதல் தலைமை தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள […]

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆட்சிக்கான தேர்தல் நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு டெல்லியில் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். இதில் வாக்காளர் பட்டியல், ஓட்டு சாவடி, தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் முதல் தலைமை தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். பின்னர் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட உள்ளது. கடந்த தேர்தலின் போது ஏழு கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றதை போன்று இந்த முறையும் நடத்த ஆலோசிக்க பட்டு வருகிறது. மேலும் 14 சதவீதம் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரூபாய் 1900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இதுவரை இல்லாத வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu