இறந்த மனிதர்களின் உடலை உரமாக மாற்றும் திட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. நியூயார்க் மாகாணம் இந்த திட்டத்தின் ஆறாவது மாகாணமாக இணைந்துள்ளது. கொலராடோ, ஒரேகான், வெர்மாண்ட், கலிபோர்னியா ஆகிய மாகாணங்களும் விரைவில் இந்த திட்டத்தில் இணையும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், கரிம வெப்பம் குறையும்; இது இயற்கையான கரிம குறைப்பு நடவடிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது.
இறந்த மனிதர்களின் உடல், ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக மாற்றப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுவதால், இளைய தலைமுறை மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும், புவி வெப்பமயமாதல் குறைப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இது தவிர, தகனம் செய்வதற்கான செலவினங்கள் பெருமளவு குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கத்தோலிக்க திருச்சபை இதனை துரதிருஷ்டவசமானது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “மனிதர்களின் எச்சங்களை மாற்றம் செய்வது எஞ்சியுள்ளவர்களுக்கான மரியாதையை விட உணர்ச்சிகரமான தூரத்தை உருவாக்கும். மனித எச்சங்கள் கூட, அழியாத ஆன்மாவுடனான தொடர்பு குறிப்பிட்ட வகுப்புவாத இடத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.