இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

November 12, 2022

வங்கக் கடலில் வலுவடைந்துள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்க உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நவ., 9ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அதிக கன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தமிழகம், புதுச்சேரி இடையே கரையை கடக்கும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் முதல் இலங்கை […]

வங்கக் கடலில் வலுவடைந்துள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்க உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நவ., 9ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அதிக கன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தமிழகம், புதுச்சேரி இடையே கரையை கடக்கும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் முதல் இலங்கை வரை காற்றழுத்த தாழ்வு பகுதி பரவி உள்ளது. இது தமிழக, கேரள பகுதிகள் வழியாக நகர்ந்து அரபிக் கடலுக்கு சென்று, ஏமன் நாடு வரை பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu