ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு விண்கல் தீப்பிழம்பாக பூமியில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகள் முன்னரே இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். சுமார் 70 செ.மீ விட்டம் கொண்ட இந்த விண்கல் வளிமண்டலத்தில் நுழைந்தபோது பல துண்டுகளாக உடைந்து தீப்பிழம்பாக வானில் ஒளிரும் காட்சி பலராலும் பார்க்கப்பட்டது. மேலும், இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக, இந்த விண்கல் விழுந்த இடம் வனப்பகுதி என்பதால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. விஞ்ஞானிகள், இந்த விண்கல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என முன்னரே தெரிவித்திருந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது.