வரி செலுத்துவோருக்கான புதிய செல்போன் செயலியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறை வரி செலுத்துபவர்கள் நலன் கருதி 'ஏ.ஐ.எஸ். பார் வரி செலுத்துவோர்' என்ற புதிய செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் தகவல் சுருக்கம், தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்க்க முடியும். வருமான வரித்துறையால் இலவசமாக வழங்கப்படும் செல்போன் பயன்பாடு ஆகும்.
வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், வருமான வரி திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பெற முடியும். வரி செலுத்துபவருக்கு தகவல் பற்றிய கருத்தை வழங்குவதற்கான விருப்பமும் வசதியும் உள்ளது. இந்த செல்போன் செயலியை அணுக, வரி செலுத்துவோர் பயன்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் இணக்கத்தை எளிதாக்குகிறது என்று டெல்லி வருமானவரி கமிஷனர் சுரபி அலுவாலியா கூறி உள்ளார்.














