பூமியை தாக்கப் போகும் புதிய விண்கல் - நாசா எச்சரிக்கை அறிக்கை வெளியீடு

வரும் 2038 ஆம் ஆண்டு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத விண்கல் ஒன்று, பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. இது பூமிக்குள் விழுவதற்கான வாய்ப்பு 72% உள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. விண்கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவ்வாறு ஆபத்து நேரும் பட்சத்தில், விண்கல் பாதையை திசை திருப்பும் நோக்கில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

வரும் 2038 ஆம் ஆண்டு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத விண்கல் ஒன்று, பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. இது பூமிக்குள் விழுவதற்கான வாய்ப்பு 72% உள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

விண்கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவ்வாறு ஆபத்து நேரும் பட்சத்தில், விண்கல் பாதையை திசை திருப்பும் நோக்கில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை நம்மால் கண்டறியப்படாத புதிய விண்கல் பூமியை தாக்கலாம். இந்த நிகழ்வை தடுப்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. இது ஜூலை 12, 2038 அன்று பூமியை தாக்கலாம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. விண்கல் குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu