நேற்று நடந்த முழு சந்திர கிரகணத்தை மேக மூட்டம் காரணமாகக் காண முடியவில்லை.
நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறையும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் ஆகும். இந்திய நேரப்படி நேற்று மாலை 2:39 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு முடிந்தது. இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3:46 மணியில் இருந்து மாலை 5:11 மணி வரை நடந்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணம் தெளிவாக காண முடிந்தது.
சென்னையில் மாலை 5:38 மணிக்கு தான் சந்திரன் உதயமானது. அந்நேரம் மழை மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை பார்க்க முடியவில்லை. பல மாவட்டங்களிலும் இதே நிலை ஏற்பட்டது.