மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சத்திற்கு அதிக மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்திலிருந்து, இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதில் இந்தூர் தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் […]

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சத்திற்கு அதிக மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்திலிருந்து, இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதில் இந்தூர் தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு இந்தூரின் மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்னதாக ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகள் நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்தது. தற்போது இந்தூர் இந்த சாதனையை முறியடித்து உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu