நியாய விலை கடைகளில் கண் கருவிழி மூலம் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தொடக்கம்

October 17, 2022

நியாய விலை கடைகளில் கண் கருவிழி மூலம் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம், நியாய விலைக் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொது வினியோகத் திட்ட அங்காடிகளில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் வினியோகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். […]

நியாய விலை கடைகளில் கண் கருவிழி மூலம் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம், நியாய விலைக் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொது வினியோகத் திட்ட அங்காடிகளில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் வினியோகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறுகையில், ஏற்கனவே கைரேகை மூலமாக நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கான திட்டம் உள்ளது. தற்போது மேலும் புதிய திட்டமாக, கண் கருவிழி மூலம் சரிபார்ப்பு முறையில் பொருட்களை வாங்கும் திட்டத்தை சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியிலும், அரியலூர் மாவட்டத்திலும் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பொது மக்களின் வரவேற்புக்கு ஏற்ப, தமிழக முழுவதும் விரிவுபடுத்தபடும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18 மாதங்களில் 13 லட்சத்து 42 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் 2,400 நியாய விலை கடைகள் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu