வலுபெறும் புயல் சின்னம் தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

November 28, 2023

தமிழகத்தில் புயல் சின்னம் வலுப்பெறுவதன் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து இவை புயலாக வலுப்பெறக்கூடும். மேலும் இலங்கை மற்றும் அதனை […]

தமிழகத்தில் புயல் சின்னம் வலுப்பெறுவதன் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து இவை புயலாக வலுப்பெறக்கூடும். மேலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu