தைவானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

April 3, 2024

தைவானில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிட்டர் அளவில் 7. 5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தைவானை உலுக்கியுள்ளது. இதில் நான்கு பேர் பலியானதாகவும், ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி இருப்பதாவது, தைவானின் ஹுவாலியனில் புதன் அன்று காலை […]

தைவானில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிட்டர் அளவில் 7. 5 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தைவானை உலுக்கியுள்ளது. இதில் நான்கு பேர் பலியானதாகவும், ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி இருப்பதாவது, தைவானின் ஹுவாலியனில் புதன் அன்று காலை 8 மணி அளவில் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைப்பெயில் ஏராளமான வீடுகள் மற்றும் பழைய கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த நிலஅதிர்வுகளை தொடர்ந்து அங்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் பொது ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் கடற்கரையில் உள்ள தைவானிய கட்டுப்பாட்டில் உள்ள தீவான கின்மென் வரை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu