தமிழகத்தில் தற்போது அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறைகள் அடிக்கடி சோதனைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட சிறுமி பலியானதை அடுத்து தமிழகத்தில் அசைவ ஹோட்டல்களில் அடிக்கடி உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் தரமில்லாத உணவுகளை சமைத்து பரிமாறிய உணவகங்கள் மீது பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இதுவரை 307 புகார்கள் வந்துள்ளன. 206 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடத்திய சோதனையில் சுமார் 1187 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு 115 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் ஒரு கோடியே 61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளில் ஏற்படும் இந்த சோதனைகள் தொடரும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.