ஆதார் அட்டை புதுப்பிப்பு கால அவகாசம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியீடு

August 27, 2024

ஆதார் அட்டையை புதுப்பிக்க 14 ஆம் தேதி வரை கால அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக விளங்குகிறது. தற்போது, 140 கோடியே 21 லட்சம் 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் அட்டையை புதுப்பிக்க, 2016-ல் ஆதார் ஆணையம் புதிய விதிகளை வெளியிட்டது. அதன் படி, ஆதார் வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். புதிய விவரங்களை புதுப்பிக்க […]

ஆதார் அட்டையை புதுப்பிக்க 14 ஆம் தேதி வரை கால அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக விளங்குகிறது. தற்போது, 140 கோடியே 21 லட்சம் 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் அட்டையை புதுப்பிக்க, 2016-ல் ஆதார் ஆணையம் புதிய விதிகளை வெளியிட்டது. அதன் படி, ஆதார் வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். புதிய விவரங்களை புதுப்பிக்க வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு அல்லது வங்கிக் கணக்கு புத்தகங்களை கொண்டு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். மேலும், https://myaadhaar.uidai.gov.in/ இணையதளத்திலும் புதுப்பிக்க முடியும். தற்போதைக்கு, 100 கோடியே 14 லட்சம் 12 ஆயிரத்து 413 பேர் ஆதார் அட்டை புதுப்பித்துள்ளனர், ஆனால் 40 கோடியே 7 லட்சம் 56 ஆயிரத்து 436 பேர் இன்னும் புதுப்பிக்கவில்லை. செப்டம்பர் 14-க்கு முன்னர் கட்டணமின்றி புதுப்பிக்க முடியும், பிறகு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu