புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்துத்துறை தலைவர்கள், செயலர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆதார் எண் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதாக செல்ல உதவியாக இருக்கும் என்பதால், அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.