ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியில்லை என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என்று அவர் கூறினார்.