இந்தியாவில் 13 சதவீத மக்கள் நீரிழிவு விழித்திரை நோய் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகையில் 13 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் விழித்திரை பாதிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். இது பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நீரிழிவு விழித்திரை நோயாக மாறலாம். நீரிழிவு விழித்திரை நோய் மற்றும் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் வகையில் பரவலான தேசிய மற்றும் துணை தேசிய மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 19 சதவீதம் பேரில், 78 சதவீதம் விழித்திரைப் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது பொதுவான காரணமாக இருந்தாலும் நோயின் பிற்பகுதியில் பார்வை பாதிக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக நீரிழிவு விழித்திரை பாதிப்பு காரணமாக குருட்டுத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.