வங்கதேசத்தில், ராணுவத்தினருக்கும் குகி-சின் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சி படைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 274 வங்கதேசத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தனி நாடு கோரிக்கையை முன்வைத்து, வங்கதேச ராணுவத்திற்கும், குகி-சின்-மிசோ சமூகத்தினரின் கிளர்ச்சி படைக்கும் இடையே, நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், வங்கதேச எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் லாங்டாலியில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான உதவிகள் அங்கு வழங்கப்பட்டு வருகின்றன.