கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில் இயக்கத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களின் […]

கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில் இயக்கத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்சமயம் 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது.

இந்த மாதம் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கோடைகால மொத்த மின்தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு கோடைகாலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu