ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால் நடவடிக்கை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போர் மீது நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதும் வரும் 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்மாசு ஏற்படுகிறது. இதனால், நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதற்கான வழிமுறையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய […]

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போர் மீது நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுதும் வரும் 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்மாசு ஏற்படுகிறது. இதனால், நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதற்கான வழிமுறையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நீர் மாசுபடுவதை தடுக்க , வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அனுமதிக்கும் படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வர்ணம், நச்சு, மக்காத ரசாயன சாயம், வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இவற்றை மீறி நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடிய சிலைகளை கரைத்தால், தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் - 1974ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu