கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

October 21, 2022

கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கட்டுமானக் கழிவுகளை கையாள, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்திற்கும், பணிகளைத் […]

கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கட்டுமானக் கழிவுகளை கையாள, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்திற்கும், பணிகளைத் தொடங்கும் முன் கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சமர்ப்பித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த அனுமதிகளைப் பெற வேண்டும்.

கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகளை போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், கழிவுகளை சேமிப்பதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் தினசரி 400 டன் திறன் கொண்ட கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை செயல்படுத்துவதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே கட்டுமான கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் நியமிக்கப்பட்ட பகுதி தவிர, சாலைகள், நதிக்கரைகள், நீர்நிலைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் கொட்டினால், அவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (திருத்தப்பட்டது) விதிகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu