2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

October 20, 2022

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில், தென்காசி உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தொகுதியில் தரைப் பாலத்தை மாற்றி மேம்பாலம் கட்டித் தர கோரி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தங்கள் தொகுதியில் பாலங்கள் கட்டுவது குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 1,281 […]

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில், தென்காசி உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தொகுதியில் தரைப் பாலத்தை மாற்றி மேம்பாலம் கட்டித் தர கோரி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தங்கள் தொகுதியில் பாலங்கள் கட்டுவது குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 1,281 தரைப் பாலங்கள் உள்ளன. இவற்றை மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 648 பாலங்கள், நபார்டு கிராமப்புற சாலைகள் திட்டத்தில் 41 பாலங்கள் என 689 தரைப் பாலங்களை ரூ.755 கோடியில் மேம்பாலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் 66, நபார்டு திட்டத்தில் 84, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 22 என 172 பாலங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2023-24-ம் நிதி ஆண்டில் மற்ற பாலங்களும் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu