வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் அகற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம் 

December 2, 2022

விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணையின் போது, சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்றாவிட்டால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், தாங்களே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். இதனால் கடும் கோபமடைந்த நீதிபதிகள், 'மிரட்டும் தொனியில் மனு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும், 'மனுதாரருக்கு அதிகபட்ச […]

விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணையின் போது, சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்றாவிட்டால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், தாங்களே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். இதனால் கடும் கோபமடைந்த நீதிபதிகள், 'மிரட்டும் தொனியில் மனு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும், 'மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைகளின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும், வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது. அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu