பாகிஸ்தான், சீனாவின் குடியுரிமை பெற்றுச்சென்ற எதிரிகளின் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் குடியுரிமை பெற்று, இந்தியாவில் இருந்து தப்பியவர்கள் ஏராளமான அசையா சொத்துகளை இங்கே விட்டுச்சென்றிருக்கிறார்கள். இப்படி 12 ஆயிரத்து 611 சொத்துகள் விட்டுச்செல்லப்பட்டுள்ளன. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இந்த சொத்துகள் எதிரி சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எதிரியின் சொத்துகள், சி.இ.பி.ஐ. என்று அழைக்கப்படுகிற இந்திய எதிரி சொத்து பாதுகாவலர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. இதற்காக நமது நாட்டில் எதிரி சொத்து சட்டம் என்று ஒரு தனிச்சட்டமே உள்ளது.
நாட்டை விட்டுச்சென்றவர்கள், விட்டுச்சென்ற சொத்துகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ளது.