சாலை போக்குவரத்து அபராத தொகையில் அதிரடி தள்ளுபடி

December 27, 2023

தெலுங்கானாவில் சாலை விதிகளை மீறி அபராதம் செலுத்த முடியாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு அம்மாநில அரசு 60 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. சாலைப்போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இதன் தண்டனை மற்றும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பலரால் அபராதம் செலுத்த முடியவில்லை. […]

தெலுங்கானாவில் சாலை விதிகளை மீறி அபராதம் செலுத்த முடியாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு அம்மாநில அரசு 60 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சாலைப்போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இதன் தண்டனை மற்றும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பலரால் அபராதம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு 60 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதிக்குள் நிலுவை தொகைகளை கட்டுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெலுங்கானா மாநில போக்குவரத்து ஈ சலன் இணையதளத்தில் சென்று தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu