மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என திட்டவட்டம்

December 27, 2023

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள் ஆன தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெய்த கனமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை […]

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள் ஆன தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெய்த கனமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தலைமையில் மழை, வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரங்களாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தேவையான நிவாரணம் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் 78 பக்க ஆய்வறிக்கையை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதனை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது எனவும் வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வோம் எனவும், மாநில அரசுகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu