தேமுதிக கட்சியின் தலைவர் மற்றும் நடிகரான விஜயகாந்த் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் இன்று காலை காலமானார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு கவர்னர் ரவி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.