அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் காலாண்டு லாபம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டு சுமத்தியது. அதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை நிறுவனம் இழந்தது. ஆனால், அதன் பின்னர் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், நிறுவனம் சரிவில் இருந்து மீண்டு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் 7.22 பில்லியன் ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டில் 3.04 பில்லியன் ரூபாயாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் செலவினங்கள் 22% உயர்ந்து, 301.8 பில்லியன் ரூபாய் ஆக சொல்லப்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நேற்று இந்த தகவல்களை வெளியிட்டது. இந்த தகவல்கள் வெளியானவுடன், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5.1% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.














