இலங்கை அரசுடன் 440 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அதானி குழுமம் ரத்து செய்தது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசுடன் 440 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், சந்தை விலையைவிட 70% அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இலங்கை அரசு கடந்த மாதம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதன் பின்னர், அதானி குழுமம் இலங்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியிட்ட செய்தியில், "இலங்கையின் RE காற்றாலை மின்சார திட்டம் மற்றும் மின் பரிமாற்ற திட்டங்களில் இருந்து விலகுகிறோம். ஆனால், இலங்கை அரசு எதிர்கால ஒத்துழைப்பிற்காக அழைக்கும்வரையில், எங்களது தயார் நிலை நிலவும்" எனத் தெரிவித்துள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.