அதானி குழுமம், ராஜஸ்தானில் 65000 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய மின் நிலையம் அமைக்கிறது

October 8, 2022

ராஜஸ்தான் மாநிலத்தில், இன்வெஸ்ட் ராஜஸ்தான் 2022 மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் பிரவீர் சின்ஹா, மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் ஷா, செயின்ட் கோபின் நிறுவனத்தின் ஆசியா பிரிவு தலைவர் சந்தானம், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சி கே பிர்லா, அஜய் […]

ராஜஸ்தான் மாநிலத்தில், இன்வெஸ்ட் ராஜஸ்தான் 2022 மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் பிரவீர் சின்ஹா, மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் ஷா, செயின்ட் கோபின் நிறுவனத்தின் ஆசியா பிரிவு தலைவர் சந்தானம், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சி கே பிர்லா, அஜய் எஸ் ஸ்ரீராம், லட்சுமி மிட்டல் போன்றவர்களும் விழாவில் பங்கு பெற்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட், விழாவிற்கு தலைமை தாங்கி, விழாவினைத் துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய கௌதம் அதானி, "அதானி குழுமத்தின் நடப்பு மற்றும் எதிர்கால முதலீடுகளுடன், கூடுதலாக 65000 கோடி ரூபாயை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் ராஜஸ்தானில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதலீடு, 10000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம், 40000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்று கூறினார். மேலும், உதைப்பூரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு அதானி குழுமம் முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை எடுக்கவும் அதானி குழுமம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதானி குழுமத்திற்கு சொந்தமாக, 3 சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஆகியவை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அவற்றின் விரிவாக்க திட்டத்திற்காக சுமார் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்பற்று தலைவர்களின் செயல்களை அவர் நினைவு கூர்ந்து பேசினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியில் செயல்படும் தொழில் பாதுகாப்பு படையைப் போலவே (CISF) ராஜஸ்தான் மாநிலத்திலும் அத்தகைய படை (RISF) ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதன் மூலம், மாநிலத்தில் செயல்படும் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். அத்துடன், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu