மகாராஷ்டிரா மாநில மின்சார வாரியம், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தில் ஈடுபட உள்ளது. அதற்கான 2 முக்கிய ஒப்பந்தங்களை அதானி குழுமம் வென்றுள்ளது. இவற்றின் மதிப்பு 13888 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் திட்டத்திற்காக மொத்தம் 6 டெண்டர்கள் விடுக்கப்பட்டன. அவற்றில் 2முக்கிய டெண்டர்களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. பாந்தப், கல்யாண், கொங்கன் பகுதிகளை உள்ளடக்கிய மண்டலமும், புனே, பாராமதி பகுதிகளை உள்ளடக்கிய மண்டலமும், அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் முறையே 63.44 லட்சம் மற்றும் 52.45 லட்சம் எண்ணிக்கையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.