அதானி குழுமத்தின் நிதியானது ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது பண மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த நிதிகள் வெளிச்சத்துக்கு வராத, பெரிதும் பிரபலமடையாத வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும், இது கணக்கு பரிவர்த்தனைகளை மறைக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அதானி குழுமம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. சுவிஸ் நீதிமன்றத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்றும், அவர்களது கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தங்கள் நிறுவனத்தின் புகழ் மற்றும் சந்தை மதிப்பை கெடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வெளியிடப்படுவதாக கூறியுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவின் வணிக உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.