பசுமை எரிசக்தி திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 800 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள எதிர்கால செயல் திட்டங்களுக்காக, இந்த நிதி திரட்டப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கு பிறகு, இத்தகைய பெரும் நிதி திரட்டும் நடவடிக்கையில் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி திரட்டுவது தொடர்பாக, Sumitomo Mitsui Banking Corp., DBS Bank Ltd., Mitsubishi UFJ Financial Group, Standard Chartered Plc போன்ற சர்வதேச வங்கிகளுடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.