இணைய வழியில் பணப் பரிவர்த்தனை சேவைகளை கூகுள் பே, போன் பே போன்ற பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிதாக இந்த துறையில் அதானி குழுமம் களமிறங்குகிறது. இது தொடர்பாக பல வங்கிகளுடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, இணையவழி பண பரிவர்த்தனையில் 48.9% சந்தை பங்களிப்பை போன் பே கொண்டுள்ளது. போன் பே நிறுவனத்துக்கு அடுத்ததாக 37.7% சந்தை பங்களிப்புடன் கூகுள் பே உள்ளது. இந்த சூழலில் அதானி குழுமம் டிஜிட்டல் பேமென்ட் சர்வீசஸ் அல்லது இணையவழி பண பரிவர்த்தனை சேவைகள் துறையில் புதிதாக களமிறங்குகிறது. முன்னதாக, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா உடன் கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேடிஎம் பங்குகளை வாங்கி அதானி குழுமம் இந்த துறையில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது .