கவுதம் அதானி பிடிவாரண்ட் எதிரொலி - அதானி குழும பத்திர விற்பனை நிறுத்தம்

November 21, 2024

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் தனது 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை திடீரென ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEC) மற்றும் நீதித்துறை ஆகியவை அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். அமெரிக்க அரசு, அதானி குழுமம் இந்திய அரசாங்கத்துடன் செய்துள்ள எரிசக்தி ஒப்பந்தங்களில் லஞ்சம் கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, உயர் விலையில் […]

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் தனது 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை திடீரென ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEC) மற்றும் நீதித்துறை ஆகியவை அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க அரசு, அதானி குழுமம் இந்திய அரசாங்கத்துடன் செய்துள்ள எரிசக்தி ஒப்பந்தங்களில் லஞ்சம் கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, உயர் விலையில் எரிசக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை எனில், அதானி குழுமம் மீது பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி பணத்தை மோசடி செய்ததாகவும் அதானி கிரீன் எனர்ஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு கோரியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu