அதானி குழுமம், 3.5 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தை முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதிலிருந்து, அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையாக, சுமார் 3.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை அதானி குழுமம் முடித்து வைக்க உள்ளது. அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒப்புதல் வழங்கி உள்ளன. அதானி குழுமத்தின் 3.5 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தை, ஆசியாவிலேயே மிகப்பெரிய 10 கடன்களுள் ஒன்றாக ப்ளூம்பர்க் அறிவித்துள்ளது. எனவே, அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.