அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் - நிபுணர்கள் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று அமைத்தது. இந்தக் குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படுகிறது. எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பட், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.பி. தேவ்தர், வங்கித் துறை […]

அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று அமைத்தது. இந்தக் குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படுகிறது. எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பட், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.பி. தேவ்தர், வங்கித் துறை நிபுணர் கே.வி. காமத், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனி, வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரேஷன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணையையும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu