கௌதம் அதானியின் துறைமுகப் பிரிவான அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் லிமிடெட், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அஸ்ட்ரோ நிறுவனத்தின் 80% பங்குகளை வாங்குகிறது. கிட்டத்தட்ட 185 மில்லியன் டாலர்களுக்கு இந்த கையகப்படுத்தல் நடைபெறுகிறது.
இந்த கையகப்படுத்தல் மூலம், அதானி குழுமத்தின் கப்பல் எண்ணிக்கை 142 ல் இருந்து 168 ஆக உயர்கிறது. மேலும், முதல் தர வாடிக்கையாளர்களுக்கு எளிமையான அணுகல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், அஸ்ட்ரோ நிறுவனம் 95 மில்லியன் டாலர்கள் வருவாய் மற்றும் 41 மில்லியன் டாலர்கள் லாபத்தை பதிவு செய்துள்ளது. எனவே, அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தம், முதல் ஆண்டிலிருந்தே மதிப்பு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.