அதானி போர்ட்ஸ் நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான மொத்த நிதி அறிக்கையையும் இணைந்து வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த காலாண்டில், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 3% உயர்ந்து, 1141 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், 2023 ஆம் ஆண்டுக்கான நிகர லாபம் 9% உயர்ந்து, 5393 கோடியாக கூறப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 40% உயர்ந்து, 5797 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக, 22% வருவாய் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 20852 கோடி அளவில் அதானி போர்ட்ஸ் வருவாய் பதிவாகியுள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், அதானி போர்ட்ஸ் வரலாற்று முதலீடுகளை நிகழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 27000 கோடி மதிப்பில் முதலீடுகள் அமைந்துள்ளன. அத்துடன், 2023 ஆம் நிதியாண்டில், 339.2 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9% உயர்வாகும்.