அதானி போர்ட்ஸ் நிறுவனம் இன்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 4.2% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 1747.8 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 6646.6 கோடி ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 27.6% உயர்வாகும். மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 4053.9 கோடி ரூபாயாக உள்ளது. இது 35% உயர்வாகும். மேலும், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6951.86 கோடியாகவும், மொத்த செலவினங்கள் 4477 கோடியாகவும் உள்ளது. அத்துடன், நிறுவனம் கையாண்ட மொத்த சரக்குகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் 14% உயர்வாக சரக்கு கையாளல் நிகழ்ந்துள்ளது.