அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் இயக்க வருவாய் 18% உயர்ந்து, 4786 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில், 4072 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் வரிக்குப் பின்னான லாபம் 13% சரிவடைந்து, 1337 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில், வருவாய் 16% உயர்ந்து, 15055 கோடியாகவும், லாபம் 11% உயர்ந்து, 4252 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி, "அதானி போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னேற்ற பாதையில் பயணித்து வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில், EBITDA மதிப்பு 14,500 முதல் 15,000 கோடி வரை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹைஃபா துறைமுகம் மற்றும் கங்காவரம் துறைமுகம் ஆகியவற்றில் வர்த்தகப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.