இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே தீவிர போர் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகம் வைத்திருக்கும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பேரிழப்பை சந்தித்த நிறுவனமாக அதானி போர்ட்ஸ் உள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4.89% சரிவை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியதும், அதானி குழுமம் உரிய விளக்கம் அளித்துள்ளது. அதாவது, "மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது தான். ஆனால், ஹைஃபா துறைமுகம் அதானி குழும துறைமுகங்களின் மொத்த அளவில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே கையாளுகிறது. எனவே, போரினால் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்புகள் இருக்காது" என தெரிவித்துள்ளது.