அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அறிக்கை மிகப்பெரிய இழப்பை தந்துள்ளது. அதிலிருந்து மீளும் நடவடிக்கையாக, அதானி போர்ட்ஸ் நிறுவனம் 2024 பத்திரங்களில் இருந்து 2.3 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப பெற உள்ளது. இது 195 மில்லியன் டாலர்களுக்கு சமமாகும்.
அதானி போர்ட்ஸ் பெற்றுள்ள ஒவ்வொரு 1000 டாலர் கடனுக்கு 975 டாலர் செலுத்த வேண்டும் என ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, அது 965 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 520 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 2024 பத்திரத்தில், அதானி போர்ட்ஸ் -ன் திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு பிறகு, வெறும் 325 மில்லியன் டாலர்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.