அதானி குழுமத்தைச் சேர்ந்த துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ், வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது.
வரும் ஜூன் 24ஆம் தேதி முதல், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை ஆசியா இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, விப்ரோ நிறுவனத்திற்கு மாற்றாக அதானி போர்ட்ஸ் பட்டியலுக்குள் இடம் பிடிக்கிறது. மேலும், சென்செக்ஸ் 50 பட்டியலுக்குள், டாடா குழுமத்தை சேர்ந்த ட்ரெண்ட் நிறுவனம் நுழைகிறது. டேவிஸ் லெபாரட்டரீஸ் நிறுவனம் வெளியேறுகிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலுக்குள் நுழைவது அதானி குழுமத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.