ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் சிமெண்ட் யூனிட்டை வாங்கும் அதானி குழுமம்

October 10, 2022

ஜெயபிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், தற்போது கடனில் தத்தளிக்கிறது. எனவே, அதன் சிமெண்ட் யூனிட்டை விற்க முடிவெடுத்துள்ளது. அண்மையில், ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் நிர்வாகக் குழு அமைப்பினர் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர். இந்நிலையில், ஜெயப்ரகாஷ் குழுமத்தின் சிமெண்ட் யூனிட்டை கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் வாங்குவதற்கு இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 606 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அதானி குழுமம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெயப்பிரகாஷ் […]

ஜெயபிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், தற்போது கடனில் தத்தளிக்கிறது. எனவே, அதன் சிமெண்ட் யூனிட்டை விற்க முடிவெடுத்துள்ளது. அண்மையில், ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் நிர்வாகக் குழு அமைப்பினர் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர். இந்நிலையில், ஜெயப்ரகாஷ் குழுமத்தின் சிமெண்ட் யூனிட்டை கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் வாங்குவதற்கு இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 606 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அதானி குழுமம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் நைகிரி சிமெண்ட் கிரைண்டிங் ஆலையை கையகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 5000 கோடிக்கு சமமாகும்.

கடந்த மே மாதத்தில், சுவிட்சர்லாந்தின் ஹோல்ச்சிம் நிறுவனத்திடம் இருந்து அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதன் மூலம், சிமெண்ட் உற்பத்தியில், இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் மாறியது. தற்போது, அதானி குழுமத்தின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தி 67.5 மில்லியன் டன்களாக உள்ளது. இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் சிமெண்ட் ஆலையை அதானி குழுமம் வாங்கினால், கூடுதலாக இரண்டு மில்லியன் டன் அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்ய முடியும். இது அதானி குழுமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே, கடந்த மாதத்தில், இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 140 மில்லியன் டன் அளவில் சிமெண்ட் உற்பத்தியை விரிவாக்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. அதற்காக, 200 பில்லியன் ரூபாய் அளவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தது. அந்த வகையில், ஜெயப்பிரகாஷ் குழுமத்தின் ஆலையை அதானி குழுமம் கையகப்படுத்தும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த வாரத்திற்குள் முழு விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu