"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்திற்கு கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 2024-25 நிதியாண்டில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் 8 லட்சம் குடிசை வீடுகளை மாற்றி, "குடிசையில்லா தமிழ்நாடு" இலக்கை அடைய உதவும். ஒவ்வொரு வீடும் 360 சதுர அடியில் கட்டப்படும். இதுவரை ரூ.995.61 கோடி செலவிட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகளை விரைவுபடுத்த ரூ.400 கோடி மேலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து வீடுகளும் இந்த நிதியாண்டிற்குள் கட்டி முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.