திருப்பதியில் நவராத்திரி கருட சேவைகளுக்கு சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நவராத்திரி பண்டிகை பிரம்மோற்சவ விழா கடந்த 15 ஆம் தேதி முதல் திருப்பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காலை,இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் நாளை பிரம்ம உற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நடைபெறுகிறது. இதற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.