வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

February 16, 2024

நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாளான நாளை மற்றும் நாளை மறுநாள் அதை தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, […]

நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வார இறுதி நாளான நாளை மற்றும் நாளை மறுநாள் அதை தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி,தூத்துக்குடி, கோயம்புத்தூர்,சேலம்,ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களுர் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்து பெங்களூருக்கு 200 சிறப்பு பேருந்துகளும் மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் சொந்த ஊர் சென்று திரும்பி வரும் மக்களின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu