ஏப்ரல் 1 முதல் ரூ.2000-க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் பண பரிவத்தனைகளை அரசு ஊக்குவித்து வருகின்றது. கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை மாற்றி கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது நேஷனல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சிறிய கடைகளில் 2000 ரூபாய்க்கு மேல் பரிமாற்றம் செய்தால் 1.1% , அரசு நிறுவனங்கள் தொடர்பான பண பரிமாற்றங்களுக்கு 1%, மியூச்சல் ஃபண்ட் , காப்பீடு, ரயில்வே ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு 1%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%,எரிபொருளுக்கு 0.5% என கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதுடன், இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.